Categories: தமிழகம்

காதல் முறிந்த சோகம் : காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்..!!

கோவை: காதல் தோல்வியில் இருந்த வாலிபர் ஒருவர் காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் மதினபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண படா. இவரது மகன் சுரஜித் கட்டுவா (28). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த சுரஜித், டவுன்ஹால் பகுதியில் உள்ள தியாகி குமரன் வீதியில் தங்கி நகை வடிவமைப்பு வேலை செய்து வந்தார்.

இதனிடையே மேற்கு வங்கத்தில் உள்ள ரத்தினா என்ற பெண்ணும், சுரஜித்தும் காதலித்து வந்தனர். சுரஜித் தனது காதலியின் ஞாபகமாக, அவரது துப்பட்டாவை தன்னுடனேயே வைத்திருந்தார். இருவரும் செல்போனிலேயே தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், ரத்தினாவுக்கும் சுரஜித்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தினா தனது காதலை முறித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், சுரஜித் மன வேதனையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது அறையில் தனியாக இருந்த சுரஜித், காதலியின் துப்பட்டாவில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் வெரைட்டி ஹால் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுரஜித்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.