விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27) என்பவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ஹரிஹரன், அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்துக் கொண்ட அவர், அவற்றை தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹரிஹரன், அவரது நண்பர்களான ஜூனத் அகமது (வயது 27), பிரவீன் (வயது 21) மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் அந்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மிரட்டி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அவரும் அந்த வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், இதுதொடர்பாக அந்த பெண் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகியோரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.