கோவை: துடியலூர் அருகே பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்து சேவல் திருட்டில் ஈடுபடும் 3 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்வதற்க்காக வெளியே சென்ற சுமார் 6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளை நிற சேவல் ஒன்று திரும்பி வராமல் இருந்துள்ளது.
இதையடுத்து அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இரு சக்கரவாகனத்தில் வரும் 3 சிறுவர்கள் அங்கு மேய்ந்துகொண்டிருந்த வெள்ளை நிற சேவலை துரத்திப் பிடித்து அதை தங்களது இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து சுரேஷ்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களை தேடிவருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுமான பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இரவில் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் பட்டபகலில் திருட்டில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.