ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகத்தினரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கடந்த சில நாட்களாக வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை எனவும், நில அளவையர்கள் நில அளவீடு செய்ய 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர் இனிவரும் காலங்களில் இது போன்று நடவடிக்கை தொடருமானால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் வருவாய் நிர்வாகத்தினருக்கு எதிராக கட்டண கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.