கடலூர் அருகே மின் கம்பி உரசுவதால் செங்கல்லை கட்டி வைத்த மின்துறை அதிகாரிகளின் செயல் பேசு பொருளாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் சுடுகாடு அருகில் வயல்களில் உயரழுத்த மின்கம்பி மற்றும் குறைந்தழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் உயரழுத்த மின்கம்பி செல்லும் வழியில் அதன் கீழாக செல்லும் தாழ்வழுத்த மின் கம்பியானது ஒன்றையொன்று உரசிடும் விதத்தில் செல்கிறது.
இந்த இரண்டு மின் கம்பிகளும் ஒன்றை ஒன்று உரசி கொண்டால் மிகப் பரிய விபத்து மற்றும் மின் கம்பிகள் அறுந்து வயலில் விழுந்துவிடும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் இந்த மின்கம்பிகளை மாற்றி புதிய மின் கம்பிகளை சரியான உயரத்தில் அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் மின்வாரியத்துறை அதிகாரிகளோ அதனைக் கேட்டுக் கொண்டதோடு சரி, அதன்படி செய்யாமல் தங்களுக்கு வழங்கப்பட்ட புதுவிதமான பயிற்சியாக மின்வாரியத் துறை அதிகாரிகள் மின்கம்பிகள் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்க செங்கல்லை கட்டி தொங்க விட்டனர்.
மின்கம்பியின் மேல் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதால் மின் கம்பி அறுந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல் கட்டி தொங்கவிடப்பட்ட மின்கம்பிகள் பழைய கம்பிகளாக இருந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வயலில் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
மின்வாரியத்துறை அதிகாரிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாட்டை கண்டு வியந்த விவசாயிகள், மனம் நொந்து வேதனையடைந்து வருகின்றனர்.
உடனடியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கம்பிகளை அதற்குரிய அளவில் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.