விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.