கோவை : கோவையில் தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மனைவி லதா (41). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் கடந்த 7ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர்.
தொடர்ந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் லதாவின் இளைய மகன் கடந்த 16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த லதா கதறி அழுதார். மேலும், கடந்த 20ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி லதா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இளைய மகன் விபத்தில் இறந்த சோகத்தை தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சமபவம் அக்கம் பக்கத்தினரியேடே மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.