Categories: தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்.. இலங்கை கடற்படையினர் மீது அதிரடி நடவடிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32), முருகன்(54) ஆகிய 6 மீனவர்களும் கடந்த 21-ந்தேதி இரவு தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், தரங்கம்பாடி மீனவர்களை இரும்பு குழாயால் கொடூரமாக தாக்கினர்.

மேலும் மீனவர்களின் ஜி.பி.எஸ்.கருவி, தூண்டில், பேட்டரி ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையினர் தாக்கியதில் 6 மீனவர்களுக்கும் உடலில் ரத்தக்கட்டு ஏற்பட்டதுடன் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கரை திரும்பிய மீனவர்களை தரங்கம்பாடி மாவட்ட தலைமை கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்து 6 மீனவர்களையும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும நாகை கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் கடலோர போலீசார் மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும், கலெக்டர் மகாபாரதி மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது கூட்டுக்கொள்ளை, கொடூரமாக தாக்குதல், அத்துமீறி நுழைந்து திருடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

12 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

12 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

13 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

13 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

14 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

14 hours ago

This website uses cookies.