Categories: தமிழகம்

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த விவகாரம் : ஒருவனுக்கு ஆயுள், மற்றொருவனுக்கு 20 வருட சிறை தண்டனை அளித்து நீதிபதி உத்தரவு!!

விழுப்புரம் : இரு வெவ்வெறு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளில் ஒருவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் செம்பராம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி. இவருக்கு அதே பகுதியை சார்ந்த உறவினரான இளையராஜா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு மிட்டாய் வாங்கி கொடுத்து முட்புதருக்கு சிறுமியை அழைத்துச்சென்று இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்தார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட  சிறுமியின் பெற்றோர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததிம் பேரில் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில்  சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை அடுத்து இன்று நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 3 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளையராஜா, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேல்மலையனூர் அருகே உள்ள மேல்புதுப்பட்டு கிராமத்தை சார்ந்த 7 வயதுடைய சிறுமி கடந்த 2019-ம் ஆண்டில் டியூஷன் முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அதே பகுதியை சார்ந்த இளைஞர் பூபதி  வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்து இருபக்க கதவுகளையும் பூட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின்  பெற்றோர்கள் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தபுகாரின் பேரில் பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரவேல், குற்றம்சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 9 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பூபதி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

16 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

47 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

2 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

2 hours ago

This website uses cookies.