தமிழகம்

கோவையில் வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்.. உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு!

கோவையில் மருத்துவமனையில் விட்டுச் சென்ற வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பாக, நாயின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இவர் கடந்த 11 ஆண்டுகளாக மினி பொமேரியன் வகையைச் சேர்ந்த ஆண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அவரது வீட்டில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக, கடந்த நவம்பர் 20ஆம் தேதி காலை, அந்த நாயை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் விலங்குகள் மருத்துவமனையில் விட்டுச் சென்றார்.

பின்னர், அன்று பிற்பகலில் நாய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சரத்துக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து, உடனடியாக சரத் மருத்துவமனைக்குச் சென்ற போது, நாய் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, சரத் தனது உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், மருத்துவமனையின் மேலாளர் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், மருத்துவமனை மேலாளர் செல்வன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதில், மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே நாய் உயிரிழந்து விட்டதாகவும், நாயின் உரிமையாளர் சரத், அவரது பெற்றோர் குணசேகரன், உமா ஆகியோர் தன்னை அவதூறாகப் பேசி தாக்கியதோடு, மருத்துவமனையையும் சேதப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

பின்னர், இந்தப் புகாரின் அடிப்படையில், நாயின் உரிமையாளர் சரத், அவரது பெற்றோர் குணசேகரன், உமா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் நவம்பர் 28ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

5 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

7 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

7 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

8 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

8 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

9 hours ago

This website uses cookies.