Categories: தமிழகம்

பள்ளியில் சாதிய மோதல்? வீடு புகுந்து அண்ணன், தங்கைக்கு அரிவாள வெட்டு.. அதிர்ச்சியில் தாத்தா மரணம் : மாணவர்கள் கைது!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (வயது14) ஒன்பதாம் வகுப்பும், வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் புதன் கிழமை பெற்றோரிடம் தொடர்பு கொண்டு சின்னத்துரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னத் துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாகவும் அவர்கள் குறித்த விபரத்தை கூறியுள்ளார். இதனை அடுத்து சின்னத்துரையிடம் அந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பின்பு மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சின்னத்துரையை மூன்று பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அங்கு இருந்த சந்திராசெல்வி அதனை தடுத்துள்ளார். அதில் அவருக்கு கையில் அரிவாள் விட்டு விழுந்தது. அதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னத் துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த சிலர் இரு சக்கர வாகனத்தின் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .

இச்சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து காயம் பட்ட சின்னத்துரையும், சந்திரா செல்வியும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வள்ளியூர் பள்ளியில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரியில் வீடு புகுந்து அண்ணன், தங்கை வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பேரன் சின்னத்துரை வெட்டபட்ட அதிர்ச்சியில் அவரது தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்களால் அரிவாளால் வெட்டிய வழக்கில் 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

47 minutes ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

15 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

16 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

17 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

18 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

18 hours ago

This website uses cookies.