கோவை : கோவை மாநகராட்சி 15 வது வார்டு பகுதிகளில், கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதில் கவனம் செலுத்துவேன் என பா.ஜ.க.சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நளினி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்திக்கிறது.
இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சியில் 15 வது வார்டில் பா.ஜ.க வேட்பாளராக நளினி போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் அடிப்படை தேவைகள் சரியான முறையில் வார்டுகளில் நிறைவேற்றப்படவில்லை என கூறிய அவர், தாம் வெற்றி பெற்றால் குற்றங்கள் குறைவதற்கு வார்டின் அனைத்து பகுதிளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வேன் என கூறினார்.
குறிப்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை வார்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதியளித்தார். பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.மாவட்ட பொது செயலாளர் S.R.தாமோதரன் உடனிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.