திருச்சி : திருச்சி அருகே செல்போன் பறித்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் ரவுடியை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த ரவுடி தாஜூதீன். இவரது சகோதரியிடம் சில சிறுவர்கள் மிரட்டி செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாஜூதீன் சிறுவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று சகோதரியின் செல்போனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு சிறுவன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீன் கையை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சிராஜ் வெட்டப்பட்ட சம்பவத்தால் காமராஜ் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அரியமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் கைபற்றிய சிசிடிவி காட்சியில் சிறுவர் ஒருவன் அரிவாளை எடுத்துக் கொண்டு செல்வதும், விளம்பர பதாகையை கழட்டிக் கொண்டு அடிப்பது போன்றும், மற்றொரு நபர் கத்தியை எடுத்து அங்கிருந்து ஓடுவது போன்றும் பதிவாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.