கோவை : குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்களை கைது செய்த போலீசார் 14 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான சுகுணாபுரம் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தநிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு போலீசார் கோவைப்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு தப்பிக்கவும் முயற்சித்தனர். இதனிடையடுத்து அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் நால்வரும் , அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ஜிஜோ, ஹக்கீம், சிவா, கோகுல் அபிஷேக் என்பதும் நால்வரும் அப்பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 14 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.