ஈரோடு : சத்தியமங்கலம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நஞ்சப்ப கவுண்டன் புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு காங்கிரீட் தளம் அமைக்க சிமெண்ட் கலவை பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நஞ்சப்ப கவுண்டன்புதூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையின் வளைவில் லாரி திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் லாரியில் பயணித்த பவானிசாகர் காராட்சிகொரை பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய மூவரும் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் இரண்டு பொக்லின் வாகனங்களை வரவழைத்து அதன் மூலம் லாரியின் அடியில் சிக்கி இருந்த மூன்று பேரின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே வாகனத்தில் வந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
This website uses cookies.