விழுப்புரம் அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணம் மூலமாக பட்டா மாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் என்பவரது மகன் வைத்தியநாதன்.
இவர் தற்போது கோயம்புத்தூரில் பணி செய்து அங்கேயே தங்கி வசித்து வருகிறார். இந்த நிலையில், வைத்தியநாதனுக்கு சொந்தமான பூர்வீக நிலமானது அவரது தாத்தா பெயரிலிருந்து அவர் இறப்புக்கு பின்னர் தனது மகன் வழி பேரன் அல்லது பேத்திக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த உயிலை முற்றிலுமாக மறைத்துவிட்டு வைத்தியநாதனின் தகப்பனார் ராமநாதன் அவரது தம்பி சீனிவாசன் என்பவருக்கு பணம் பெற்றுக் கொண்டு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து வைத்தியநாதன் பலமுறை கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனுவாசன் என்பவர், வைத்தியநாதனின் உறவினருக்கு சாதகமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு செயல்படுவதாக கூறி வைத்தியநாதன் இன்று திடீரென கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீதி வேண்டி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட வைத்தியநாதனை வருவாய் வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தர்ணாவை கைவிட்ட வைத்தியநாதன், பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் தன்னிடம் உள்ள ஆவணங்களை சரி பார்க்காமல் அலைகழிப்பதாகவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் பதட்டமாக காணப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.