விழுப்புரம் அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணம் மூலமாக பட்டா மாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் என்பவரது மகன் வைத்தியநாதன்.
இவர் தற்போது கோயம்புத்தூரில் பணி செய்து அங்கேயே தங்கி வசித்து வருகிறார். இந்த நிலையில், வைத்தியநாதனுக்கு சொந்தமான பூர்வீக நிலமானது அவரது தாத்தா பெயரிலிருந்து அவர் இறப்புக்கு பின்னர் தனது மகன் வழி பேரன் அல்லது பேத்திக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த உயிலை முற்றிலுமாக மறைத்துவிட்டு வைத்தியநாதனின் தகப்பனார் ராமநாதன் அவரது தம்பி சீனிவாசன் என்பவருக்கு பணம் பெற்றுக் கொண்டு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து வைத்தியநாதன் பலமுறை கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனுவாசன் என்பவர், வைத்தியநாதனின் உறவினருக்கு சாதகமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு செயல்படுவதாக கூறி வைத்தியநாதன் இன்று திடீரென கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீதி வேண்டி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட வைத்தியநாதனை வருவாய் வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தர்ணாவை கைவிட்ட வைத்தியநாதன், பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் தன்னிடம் உள்ள ஆவணங்களை சரி பார்க்காமல் அலைகழிப்பதாகவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் பதட்டமாக காணப்பட்டது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.