செங்கல்பட்டு : செங்கல்பட்டுவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலைநகர் அடுத்துள்ள தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகோ எனும் சந்துரு (28). இவர் வினிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கஞ்சா வியாபாரியான இவர் மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நேற்றிரவு தனது மனைவியுடன் சந்துரு வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, சந்துருவை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த அவரது மனைவி அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அதனையும் மீறி சந்துருவின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கணவனை காப்பாற்ற முயன்ற சந்துருவின் மனைவி வினிதாவின் கையிலும் பலத்த வெட்டு விழுந்தது. இதன் பிறகு, அங்கிருந்து மர்ம கும்பல் தப்பியோடியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், கொலையாளிகள் விட்டு சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் எதற்காக நடந்தது..? கஞ்சா விற்பனை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடு புகுந்து மனைவி கண்முன் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.