கோவை கணபதி மணியகாரம்பாளையம் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு அலங்கார வளைவுகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் கொடி போன்றவற்றை வார்டு செயலாளர் குமார் தலைமையில் அமைக்கப்பட்டு வந்த நிலையில் எந்த வித ஏற்பாடுகளும் மற்றும் கொடிகளும் கட்டக் கூடாது என்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவரும் மாவட்ட தி.மு.க பிரதிநிதியுமான ஆனந்தகுமார் வார்டு செயலாளர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் கோவை மாநகராட்சி 30வது வார்டு உறுப்பினர் மேயரின் சகோதரியுமான சரண்யாவின் கணவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு 10 மேற்பட்ட அடியாட்களுடன் வந்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்து கண் மூடி தனமாக தாக்கத் தொடங்கினார்.
இதில் பால்ராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மணிகாரம் பாளையத்தில் காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.