கோவை கணபதி மணியகாரம்பாளையம் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு அலங்கார வளைவுகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் கொடி போன்றவற்றை வார்டு செயலாளர் குமார் தலைமையில் அமைக்கப்பட்டு வந்த நிலையில் எந்த வித ஏற்பாடுகளும் மற்றும் கொடிகளும் கட்டக் கூடாது என்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவரும் மாவட்ட தி.மு.க பிரதிநிதியுமான ஆனந்தகுமார் வார்டு செயலாளர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் கோவை மாநகராட்சி 30வது வார்டு உறுப்பினர் மேயரின் சகோதரியுமான சரண்யாவின் கணவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு 10 மேற்பட்ட அடியாட்களுடன் வந்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்து கண் மூடி தனமாக தாக்கத் தொடங்கினார்.
இதில் பால்ராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மணிகாரம் பாளையத்தில் காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.