கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், மக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை மாநகராட்சியிலுள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உழவர் சந்தைகள், வாரச்சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.மாநகராட்சியில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும் 12 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கும், 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டம், இரண்டாம் கட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 9 மாதங்களுக்குப் பின்னர் மூன்றாம் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதனை மாநகராட்சியிலுள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.