தமிழகம்

அறிவுரை கூறிய அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்..!!

கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அதிமுக பிரமுகரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சியின் 92 – வது வார்டு அ.தி.மு.க செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜா என்கிற ஜூனியர் ராஜா.

குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அப்போது அ.தி.மு.க பிரமுகர் ராஜா அவர்களை திட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவரான கோபிநாத் தனது நண்பர்களுடன் வந்து ராஜாவை மிரட்டி உள்ளார். இதை தொடர்ந்து மற்றொரு கொலை முயற்சி வழக்கில் கோபிநாத் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை ராஜா குனியமுத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் தனது நண்பரான பூமிநாதன் என்பவருடன் ராஜாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ராஜாவை வெட்டி உள்ளார்.

அப்போது அதனை தடுக்க முற்பட்ட ராஜாவின் இரு கைகளிலும் சரமாரியாக வெட்டு விழவே உடனடியாக இருவரும் அங்கு இருந்து தப்பியோடி உள்ளனர்.

பின்னர் ரத்த காயங்களுடன் கிடந்த ராஜாவை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்க: பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு… ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து ; கோவையில் பகீர்!

மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து அதனடிப்படையில் தலைமறைவாக இருந்த இருவரையும் பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.