கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இரும்பு நடை பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தாததால் உயர்மட்ட இரும்பு நடை பாலத்தை அரசு பள்ளி அருகே மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை – பாலக்காடு சாலை குனியமுத்தூர் ரைஸ் மில் சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் இரும்பினால் ஆன உயர்மட்ட நடைபாலம் கட்டப்பட்டது. ஆனால், இந்த பாலம் பொதுமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. பாலத்தில் ஏறுவதை தவிர்த்து சாலையில் செண்டர் மீடியாவின் இடைவெளி வழியாக மக்கள் இருபுறமும் சென்று வந்தனர்.
பொதுமக்கள் பயன்படுத்த உகந்ததாக இரும்பு நடைபாலம் இல்லை. இதனால், விளம்பர பதாகைகள் வைப்பதற்கும் மது போதை ஆசாமிகள் படுத்து உறங்குவதற்கு மட்டுமே பயன்படுகிறது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “குனியமுத்தூரில் இரும்பு நடை பாலத்தை அகற்றி 250 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ மாணவிகள் மிகுந்த பயன் அடைவார்கள் பாலத்தை இடமாற்றம் செய்ய ரூபாய் 35.60 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பாலத்தை இடமாற்றம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்,” என்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.