கோவை மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையர் சிவகுரு பிரபாகரன், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி, கோவை மாவட்டத்தின் மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், திட்ட இயக்குனராகவும் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக கோவை மாவட்டத்தின் புதிய மாநகராட்சி ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்பாக சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரை சந்திக்க வந்த ஒப்பந்ததாரர்களுக்கு, அரசு ஒப்பந்தப் பணிகளை தரமில்லாமல் மேற்கொண்டால், அதற்கான பில் தொகையை விடுவிக்கப்படாது என்று கூறியுள்ளார். எனவே, பணிகளை தரத்துடனும், உரிய கால அளவிலும் முடித்து கொடுப்பதுடன், மாநகராட்சிடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.