Categories: தமிழகம்

டெண்டர் குறித்து புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை… சங்க நிர்வாகிகளுக்கு கோவை ஒப்பந்ததாரர் நலச்சங்கம் எச்சரிக்கை…!!

டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்க நிர்வாகிகளுக்கு கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.ChandraPrakash வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;- சமீப காலமாக ஏலம் எடுப்பதற்கான தகுதி இல்லாதவர்கள் டெண்டர் எடுப்பதாக அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று தொடங்கிய நிறுவனங்கள் கூட ரூ.200 கோடிக்கு வேலை செய்வதாக புகார்களாக வருகின்றன.

அனைத்தையும் பொதுவெளியில் கொண்டு வரவேண்டாம் என்று நினைக்கிறோம். குறிப்பாக, செம்மொழி பூங்கா டெண்டரில் தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள் பங்கெடுத்து இருப்பதாக சொல்லுகிறார்கள். அவர்கள் எப்படி பில் வாங்குவார்கள் என்று தெரியவில்லை. நமது சங்க உறுப்பினர்கள் தயவு செய்து, ஏலம் எடுப்பதற்கான தகுதி இருக்கிறதா..? என்று முதலில் பார்க்க வேண்டும்.

அதிகாரிகள் யாரும் இதனை கவனிப்பதில்லை. நாளை இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கினால், உங்களின் குடும்ப நிலையை யோசித்து பாருங்கள். நெடுஞ்சாலை துறையில் தகுதியில்லாதவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. நமது சங்க உறுப்பினர்கள் டெண்டர் போட்டாலும் மிரட்டி வாபஸ் வாங்க வைக்கிறார்கள்.

ஆன்லைன் டெண்டரில் ஆன்லைனில் ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்று கூறி டெண்டரை நிராகரிக்கிறார்கள். இதனை கண்டிப்பாக நமது சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

அப்படி வழக்கு போடும் போதும், நமது சங்கத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஏதேனும் தவறு செய்வதாக புகார் எழுந்தால் நமது சங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். தகுதியில்லாமல் டெண்டரை போட்டு விட்டு சங்கம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதோ, மிஷினரி, அனுபவ சான்றிதழ் முறையாக இல்லாமல் உதவி செய்யுமாறு கூறவோ கூடாது.

முன்பைப் போல, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சிகளில் ஆவணங்கள் குறித்த உண்மை தன்மையை ஆராய்வது கிடையாது. அதற்கு பதிலாக, சைட்டை அதிகாரிகளுடன் சென்று பார்க்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டு வந்து இருக்கிறார்கள். இப்பொழுது, சைட்டை நாமாகவே டிசைன் செய்து கொள்ளும் EPC என்ற முறையில் இந்தியாவே செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுப் பணித்துறை, சென்னை, கோவை மாநகராட்சிகள், CMDA ஆகியவை சைட்டை பார்க்கவில்லை எனில் டெண்டரை ரத்து செய்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். எனது டெண்டரை ஒரு முறை ரத்து செய்துள்ளார். நிச்சயமாக நேரம் பார்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன். அப்போது, அதிகாரிகள் சிக்குவார்கள். எனவே, ஒப்பந்ததாரர்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

வெளிப்படையாக சொல்லப் போனால் செம்மொழி பூங்கா டெண்டரில் ஒரு ஒப்பந்ததாரர் பணம் வாங்க முடியாது. அதேபோல, சாலைப் பணிகளில் உங்களால் என்ன முடியுமோ..? அதை மட்டும் பண்ணுங்க.. புகார்கள் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறியுள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

48 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

50 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

1 hour ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.