கோவை : பொள்ளாச்சியில் தனியாருக்கு சொந்தமான நகை கடையில், விற்பனையாளரை திசைதிருப்பி நகையை திருடிச் சென்ற மர்ம நபரை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி கடைவீதியில் 500க்கும் மேற்பட்ட நகை கடைகள், நகை பட்டறைகள் உள்ளன. கடந்த 4ம் தேதி கடைவீதியில் உள்ள சுப்ப அண்ணன் ஜீவல்லரிக்கு வந்த மர்ம நபர், தனக்கு ஆரம் வேண்டும் என கடை உரிமையாளரிடம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, நகை டிசைன்களை காண்பித்த பொழுது, வேற டிசைனை மர்ம நபர் கேட்டதால், அலமாரியில் இருக்கும் நகையை எடுக்க முயன்ற போது, மேசையின் மீது வைத்திருந்த 6 பவுன் நகையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால், பதறிப்போன கடை உரிமையாளர் உதயகுமார், திருடி சென்ற நபரை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தபோது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
அருகில் உள்ள நகை கடைகாரர்கள் காயம் அடைத்த நபரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர்.
இதையடுத்து, உதயகுமார் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி உத்தரவின்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீசார் நகை திருடி சென்ற நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த அஜய் என்பது தெரிவந்தது.
அஜய்யிடம் 6 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் கடைவீதியில் நகை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
This website uses cookies.