கோவை ; கருமத்தம்பட்டி அருகே சேலத்தில் இருந்து கோவை வந்த அரசுப் பேருந்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கோவை நோக்கி பயணித்த அரசு பேருந்து கருமத்தம்பட்டி தெக்கலூர் எலச்சிபாளையம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியதையடுத்து, ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பயணிகள் அனைவரும் பேருத்தில் இருந்து இறங்கிய நிலையில், புகை கிளம்பிய பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது. தீயணைப்புதுறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த சூலூர் தீயணைப்புதுறையினர் தீயை கட்டுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கொளுந்து விட்டு எரிந்த தீயில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
புகை கிளம்பியதும் சாதுர்தமாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டதால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.