திடீரென கிளம்பிய புகை… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் ; எலும்புக் கூடான அரசுப் பேருந்து…!!

Author: Babu Lakshmanan
24 October 2023, 8:20 pm
Quick Share

கோவை ; கருமத்தம்பட்டி அருகே சேலத்தில் இருந்து கோவை வந்த அரசுப் பேருந்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கோவை நோக்கி பயணித்த அரசு பேருந்து கருமத்தம்பட்டி தெக்கலூர் எலச்சிபாளையம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியதையடுத்து, ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பயணிகள் அனைவரும் பேருத்தில் இருந்து இறங்கிய நிலையில், புகை கிளம்பிய பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது. தீயணைப்புதுறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த சூலூர் தீயணைப்புதுறையினர் தீயை கட்டுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கொளுந்து விட்டு எரிந்த தீயில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

புகை கிளம்பியதும் சாதுர்தமாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டதால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Views: - 368

0

0