கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
கோவை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென்று கலெக்டர் சமீரன் மாணவர் நல விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
வார்டன் விடுதியில் தங்குகிறாரா, வாரந்தோறும் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறதா? புரத சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
இதனைதொடர்ந்து, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்டோரிடம் சிகிச்சைகள், டாக்டர்கள், நர்ஸ்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு தங்கியிருந்து பணி புரியும் நர்ஸ்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.