கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
கோவை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென்று கலெக்டர் சமீரன் மாணவர் நல விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
வார்டன் விடுதியில் தங்குகிறாரா, வாரந்தோறும் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறதா? புரத சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
இதனைதொடர்ந்து, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்டோரிடம் சிகிச்சைகள், டாக்டர்கள், நர்ஸ்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு தங்கியிருந்து பணி புரியும் நர்ஸ்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.