கோவை : நண்பர்களுடன் கோத்தகிரி சென்றுவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த கார் விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முக்தார் அலி. இவரது மகன் முகமது இர்பான்(18). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இன்று காலை 6 மணி அளவில் பாரதி நகரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரது பிளஸ்-1 படிக்கும் மகன் முகம்மது தவ்பீக் (16), அப்துல் ஹமீது என்பவரது பிளஸ்-1 படிக்கும் மகன் ஆரிப் என்கிற முகமது ஆரிப் (16). கைசர் அகமது என்பவரது 10ம் வகுப்பு படிக்கும் மகன் காலித்(16), சலீம் என்பவரது பிளஸ்1 படிக்கும் மகன் ஹர்ஷத் (16), ஆகிய 5 பேரும் ஒரு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு கோத்தகிரி சென்றனர்.
பின்னர் அங்கு இருந்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பினர். காரை முகமது இர்பான் ஓட்டி வந்தார். கார் கோத்தகிரி ரோட்டில் கடைசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற முகம்மது தவபீக் (16), முகமது ஆரிப்(16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.