கோவை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வண்ண வண்ண ஆடைகளுடன் வேடமிட்டு மழலைப் பள்ளியின் குழந்தைகள் பிரமிக்க வைத்தனர்.
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ணரின் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிஸி பீ ப்ளே ஸ்கூலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் கல்பனா முரளிதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும், பெண் குழந்தைகளை ராதை போல் வண்ண ஆடைகளுடன் அலங்கரித்தும் கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளையும் படையலிட்டனர்.
மேலும், கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உறியடித்தும், புல்லாங்குழல் வாசித்தும் பிரமிக்க வைத்தனர். தொடர்ந்து ஆசிரியர்கள் கடவுளுக்கு படையலிட்ட பிரசாதங்களை குழந்தைகளுக்கு வழங்கி, கிருஷ்ணர் ஜெயந்தியை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் பள்ளியின் ஆசிரியர்கள் பிரியா, லோகேஸ்வரி, சுதா மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.