Categories: தமிழகம்

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் : மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மனு!!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் : மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மனு!!

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் மாசுபாடு அடைவதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், குப்பைகளை அழிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அந்த நடவடிக்கையை கோவை மாநகராட்சி சுணக்கம் காட்டி வந்துள்ளது.

இந்த நிலையில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு சார்பாக கோவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கடந்த 16/10/23 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம்‌ தெற்கு மண்டலத்தில்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு சம்பந்தமாக விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை முடிவில்‌ கோவை மாநகராட்சிக்கு எதிராக பல
கருத்துக்களை தெரிவித்தனர்‌. மேலும்‌ அடுத்த விசாரணைக்கு முன்னர்‌
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்‌ சார்பாக குப்பை கிடங்கை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல்‌ செய்ய உத்தரவிட்டுள்ளனர்‌.

இதனால் தங்களது வாரியம்‌ குப்பை கிடங்கு எப்படி செயல்‌படுகிறது மற்றும்‌ திடக்கழிவு 2016 சட்டத்தின்படி மாநகராட்சி செயல்படுகிறதா? முக்கியமாக கடந்த இருபது வருடங்களாக போத்தனூர்‌, வெள்ளலூர்‌ பகுதியல் வசிக்கும்‌ இலட்சக்கணக்கான மக்கள்‌ இந்த வெள்ளலூர்‌ குப்பை கிடங்கால்‌ ஏற்படும்‌ துன்பங்களை பதிவு செய்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கில்‌ 30/8/2018 ல்‌ வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி வெள்ளலூர்‌ குப்பைக் கிடங்கில்‌ இனிமேலும்‌ புதிதாக குப்பைகள்‌ கொட்ட கூடாது என்றும்‌ மாநகரத்தில்‌ உள்ள ஐந்து மண்டலங்களில்‌ அங்கேயே குப்பைகள்‌ கொட்ட தாங்கள்‌ பரிந்துரை செய்து (இப்போதும்‌ கூட எங்கள்‌ பகுதியில்‌ கடுமையான துர்நாற்றம்‌ வீசுகிறது) எங்களது பகுதியை மீட்டெடுத்து பொதுமக்களை நிம்மதியாக வாழ வகை செய்யவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

11 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

11 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

11 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

12 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

13 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

13 hours ago

This website uses cookies.