Categories: தமிழகம்

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் : மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மனு!!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் : மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மனு!!

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் மாசுபாடு அடைவதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், குப்பைகளை அழிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அந்த நடவடிக்கையை கோவை மாநகராட்சி சுணக்கம் காட்டி வந்துள்ளது.

இந்த நிலையில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு சார்பாக கோவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கடந்த 16/10/23 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம்‌ தெற்கு மண்டலத்தில்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு சம்பந்தமாக விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை முடிவில்‌ கோவை மாநகராட்சிக்கு எதிராக பல
கருத்துக்களை தெரிவித்தனர்‌. மேலும்‌ அடுத்த விசாரணைக்கு முன்னர்‌
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்‌ சார்பாக குப்பை கிடங்கை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல்‌ செய்ய உத்தரவிட்டுள்ளனர்‌.

இதனால் தங்களது வாரியம்‌ குப்பை கிடங்கு எப்படி செயல்‌படுகிறது மற்றும்‌ திடக்கழிவு 2016 சட்டத்தின்படி மாநகராட்சி செயல்படுகிறதா? முக்கியமாக கடந்த இருபது வருடங்களாக போத்தனூர்‌, வெள்ளலூர்‌ பகுதியல் வசிக்கும்‌ இலட்சக்கணக்கான மக்கள்‌ இந்த வெள்ளலூர்‌ குப்பை கிடங்கால்‌ ஏற்படும்‌ துன்பங்களை பதிவு செய்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கில்‌ 30/8/2018 ல்‌ வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி வெள்ளலூர்‌ குப்பைக் கிடங்கில்‌ இனிமேலும்‌ புதிதாக குப்பைகள்‌ கொட்ட கூடாது என்றும்‌ மாநகரத்தில்‌ உள்ள ஐந்து மண்டலங்களில்‌ அங்கேயே குப்பைகள்‌ கொட்ட தாங்கள்‌ பரிந்துரை செய்து (இப்போதும்‌ கூட எங்கள்‌ பகுதியில்‌ கடுமையான துர்நாற்றம்‌ வீசுகிறது) எங்களது பகுதியை மீட்டெடுத்து பொதுமக்களை நிம்மதியாக வாழ வகை செய்யவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.