கோவை: அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி இளநிலை உதவியாளர் பெண் ஒருவருக்கு அலுவலக ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குனவதி. ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குனவதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியான நிலையில் இவரது தாயை அண்மையில் காலமாகிவிட்டார்.
இதனால் இவருக்கு தாய் இல்லாமல் வளைகாப்பு நடக்குமா என மனச்சோர்வுடன் இருந்த குனவதிக்கு அவரது மன வலியை போக்கும் வகையில் அவருடன் பணியாற்று சக ஊழியர்கள் ஒருங்கிணைந்து இன்று அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தி அசத்தினர்.
அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் போட்டு,பொட்டு,பூ வைத்து ஆரத்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து இந்த வளைகாப்பு நடத்தினர். இதனால் மனம் மகிழ்ந்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கர்ப்பிணி குனவதி நன்றி தெரிவித்து கொண்டார். இந்த சம்பவம் அணைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.