திருப்பத்தூர் அருகே செல்போன் திருடன் எனக் கூறிய அக்காவை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மற்றும் கோகிலா இவர்களது மகள் மோனிஷா (19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இவரது சித்தப்பாவின் மகன் 13 வயது சிறுவன் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி மோனிஷா அந்த சிறுவனை பார்த்து நீதான் செல்போனை திருடியவன் என கூறி கேலி கிண்டல் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த கத்தியால் மோனிஷாவை தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். அப்போது, மோனிஷாவின் அலறும் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பாட்டி பாப்பாத்தியை சிறுவன் கத்தியால் குத்தி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த மோனிஷா மற்றும் பாப்பாத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.