கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சி… தடுக்க வந்த பாட்டிக்கும் கத்தி குத்து ; 13 வயது சிறுவனின் பகீர் வாக்குமூலம்…!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 4:35 pm
Quick Share

திருப்பத்தூர் அருகே செல்போன் திருடன் எனக் கூறிய அக்காவை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மற்றும் கோகிலா இவர்களது மகள் மோனிஷா (19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இவரது சித்தப்பாவின் மகன் 13 வயது சிறுவன் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி மோனிஷா அந்த சிறுவனை பார்த்து நீதான் செல்போனை திருடியவன் என கூறி கேலி கிண்டல் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த கத்தியால் மோனிஷாவை தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். அப்போது, மோனிஷாவின் அலறும் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பாட்டி பாப்பாத்தியை சிறுவன் கத்தியால் குத்தி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த மோனிஷா மற்றும் பாப்பாத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 727

0

0