கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ்குமார் (18). இவர் திருச்சியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது விடுமுறையில் வந்துள்ள அஜேஷ்குமார் நேற்றிரவு நண்பர்களுடன் சேர்ந்து உலக கால்பந்து போட்டியை அந்த பகுதியில் அமைக்கப்பட்ட திரையில் கண்டு ரசித்து அதிகாலை வீடு திரும்பினார்.
வீட்டின் அறையில் படுக்க சென்ற அவர் காலையில் பெற்றோர் அழைத்தும் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் மின் விசிறியில் போர்வையால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளச்சல் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே பைக் வைத்திருக்கும் அஜேஷ்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெற்றோரிடம் புதிய ரேஸ் பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், வாங்கி கொடுக்காததால் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து, தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அஜேஷ்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.