தஞ்சை புறநகர் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை நான் காசு கொடுத்து வரேனும்,நீ ஒசில வரனு சொன்ன பயணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குவாதம் நடந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரி நேரங்களில போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நாள்தோறும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை.
இந்த நிலையில், மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல ஒரு மணி நேரம் காத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவர்கள் நேர காப்பாளரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
நேரக் காப்பாள்ர் பழைய பேருந்து நிலையம் வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. பேருந்து மணி மண்டபம் அருகில் சென்றபோது, இது புறநகர் பேருந்து, நகர பேருந்தில் செல்லுமாறு நடத்துனர் மாணவர்களை பேருந்தில் இருந்து இறங்க சொன்னதாக சொல்லப்படுகிறது.
இதனால், நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பயணி ஒருவர் ‘நாங்க காசு கொடுத்து வரோம். நீ ஓசில வரனு,’ சொல்லி இருக்கிறார். தங்களை எப்படி ஓசினு சொல்லி ஒருமையில் பேசலாம் என மாணவர்கள் அந்த பயணிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.