சென்னை : கோயம்பேட்டில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயில்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற அட்டகாசங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து போலீசாரும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கின்றனர்.
அண்மையில் சென்னையில் மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடி நடனம் ஆடியும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.