கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர்.
கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் 18 வயதான ஆதர்ஸ் என்ஜினீயங் மாணவரான இவரும், இவரது நண்பர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றுள்ளனர்.
ஓணம் கொண்டாட்டம் முடிந்து திரும்பிய போது கிணற்றில் கார் விழுந்து, மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த காரை ரோஷன் ஓட்டியுள்ளார், காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார்.
ஆதர்ஷ், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ரோஷன் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கார் கிணற்றுக்குள் பாய்ந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்னமநல்லூர் ஊராட்சியில் 2 கிணறுகளும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 3 கிணறுகளும், பூலுவப்பட்டியில் ஒரு கிணறும் சாலையோரத்தில் உள்ளது. இங்கு விபத்துகள் நிகழ்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே திறந்த வெளி கிணறுகளை இரும்பு கம்பிகள் கொண்டு மூடவேண்டும். சாலையோர கிணறுகள் அருகே வேகத்தடுப்பு அமைக்க வேண்டும். திறந்த வெளி கிணறுகளை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.