சூலூரில் மாணவர்கள் – வடமாநிலத்தவர்களிடையே நிகழ்ந்த மோதல் குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்த கல்லூரி நிர்வாகம், மோதல் கைகலப்பாக மாறியதற்கான காரணம் என்ன..? என்பதை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் விடுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன் கூறியதாவது:- நேற்று இரவு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வடமாநில நபர்கள் உணவு பரிமாறிய போது, அசைவ உணவு அதிகமாக வேண்டும்படி மாணவர்களிடம் வடமாநில இளைஞர்களிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த மொழி புரியாததன் காரணமாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில், கல்லூரி மாணவர் இருவருக்கும் வடமாநில இருவருக்கும் காயம் ஏற்பட்டது. சிறுகாயம் என்பதால் முதல் உதவி செய்யப்பட்டது. தற்போது கல்லூரி வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரச்சினை எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்கள் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை, என தெரிவித்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.