தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் பணியின் போது அரசு பணத்தை முறைகேடு செய்ததாக ஒரே நேரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் வட்டார வளர்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் மதலைமுத்து, ஏரியூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன், அதே போல் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட இயங்குனரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தன், இவர்கள் மூவரும் பணியில் இருந்த போது அரசு பணத்தை முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தொடர் புகார் குவிந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மதலை முத்துவின் சொந்த வீடான தருமபுரி அடுத்த ஏமக்குட்டியூர் அடுத்த அதியமான் நகரிலும், அரூர் அடுத்த குறுஞ்சி நகரில் உள்ள ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் ஆய்வாளர் நரேந்திரன் தலைமையிலும், பாப்பிரெட்டிபட்டி அருகே ஏ.பள்ளிபட்டியில் உள்ள ஜெயராமனுக்கு சொந்தமான வீட்டில் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 5 பேர் கொண்ட குழு தனித்தனியாக காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மூன்று பேரும் இன்னும் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
This website uses cookies.