காங்கிரஸ் மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது அவரது பேராசை என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜோதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி, சிவகங்கை மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர். என்னென்ன பணிகள் மீதம் உள்ளது, கூடுதலாக நிதி எதுவும் தேவைப்படுகிறதா..? என்பது குறித்து எம்பிக்கள் அரசு அதிகாரிகளோடு, கேட்டறிந்து பணிகளை நிறைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது :- மத்திய அரசு யோக்கியமாக இருப்பது போல் அவர்களுக்கு பிடிக்காத அரசாங்களை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு சோதனைகள நடத்தி வந்தனர்.
இன்று மத்திய அரசின் அதிகாரிகளே குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகலே லஞ்சம் வாங்கி இருப்பது அவர்களின் நிர்வாக திறன் இன்மையை காட்டுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் தொடர்ந்து தவறு செய்து வருகிறார். நீதிமன்றத்தில் வாதம் மட்டுமே நடத்து வருகிறது, ஆளுநரிடம் பல்வேறு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும், மோடி மீதான எதிர்ப்பு மக்களிடம் அதிகம் உள்ளது, அது இந்த தேர்தலில் பிரதிபலிக்கும். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், இதில் நான் ஜோசியம் சொல்ல முடியாது.
கார்த்தி சிதம்பரத்தை தலைவராக தலைமை நியமித்தால் அவரும் தலைவராகலாம். யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்பது தலைமை முடிவெடுக்கும். இதில் நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளது அவரது பேராசை. குஷ்பூ விவகாரம் குறித்து நான் ஏதும் சொல்வதற்கு விரும்பவில்லை, எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.