அரியலூர் : தற்கொலை செய்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் விடுதியில் 12 ம் வகுப்பு படிந்து வந்த நிலையில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் தற்கொலை விவகாரம் மதமாற்றம்தான் காரணம் என பாஜக கூறி வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையத்திற்கு வந்து லாவண்யா பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பாஜக மாநிலத் துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜயப்பன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பாஜக சார்பில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.