நெல்லை: நெல்லையில் ஊரடங்கு விதிமுறை மீறிய 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பால், பத்திரிகை, மருத்துவம், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி, குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்திலும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் திசையன்விளை-நவ்வலடி, நாங்குநேரி – உவரி புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த புறவழிச்சாலை வழியாக தடையை மீறி வாகனங்களில் சென்றவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிமறித்து கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வைத்தனர்.
மேலும், நவ்வலடி பகுதியில் ஞாயிறு ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றிய 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதை தொடர்ந்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதனால், வெளியே சுற்றித்திரிந்த மக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.