கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் 24 ஆயிரத்து 792 பேர் தற்போது நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவல் விகிதம் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுபவர்களை விட அதிகமாகவே உள்ளது. தற்போது கோவையில் 24 ஆயிரத்து 792 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக அளவில் பாதிப்பு இருந்தாலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 90 சதவீதம் பேரை வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது. எனவே மருத்துவமனைகளில் 11 சதவீத கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 91ஆயிரத்து 412 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2546 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.