Categories: தமிழகம்

கோவை தனியார் கல்லூரி மாணவி விடுதியில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட விவகாரம் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்…!!

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்குபின் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லபட்டது.

சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த வெங்கடவரதன் என்பவரது மகள் நந்தினி (வயது 22). கோவை பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவகல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்துவரும் நந்தினி, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தனது பெற்றோருடுடன் தொலைபேசியில் பேசிய மாணவி, அதன் பிறகு கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார்.

நன்றாக படிக்கும் நந்தினி நேற்றைய செய்முறை தேர்வை புறக்கணித்த நிலையில், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் மாணவியின் செல்போனுக்கு அழைத்த நிலையில் மாணவியின் செல்போன் அணைத்து வைக்கபட்டிருந்தது.

இதனையடுத்து விடுதியின் மேற்பார்வையாளர் விடுதியில் சென்று பார்க்கும்போது மாணவி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். நேற்று காலை 10.30 மணியளவில் தனது கையை பிளேடால் அறுத்து கொண்ட மாணவி, அதனைத்தொடர்ந்து விடுதியறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த்தாகவும் நந்தினி அதற்காக சிகிச்சையும் எடுத்துகொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவசர ஊர்தி மூலம் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கார்கோ விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மாணவியின் தற்கொலைக்கு மன உளைச்சல்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

18 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

19 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

20 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

21 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

21 hours ago

This website uses cookies.