விழுப்புரம் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த உளுந்து மற்றும் நெல் மூட்டைகளை திருடிச் செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு வெளியில் உணவு சாப்பிட சென்று வரும் நிலையில் அதை நோட்டமிட்ட இருவர் தினசரி இதுபோன்று இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு மூட்டையாக கடத்தி சென்று வந்துள்ளனர்,
உளுந்து மூட்டையை இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் போது அங்கிருந்த விவசாயிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவனைப் பிடித்து விசாரித்ததில் அரகண்டநல்லூர் அருகே வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அன்பரசு (வயது 22) மற்றும் ரெனால்ஸ்(வயது 25) ஆகிய இருவர் என தெரியவந்தது,
இதில் ஒருவன் தப்பி ஓடிய நிலையில் ஒருவன் மட்டும் சிக்கிக் கொண்டான் அவன் மீது வழக்கு பதிவு செய்த அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
இருவரும் உளுந்து மூட்டை இருசக்கர வாகனத்தில் எடுத்து கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலம் வெளியிடப்பட்டுள்ளது தற்போதைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
This website uses cookies.