கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை வெள்ளம். வீடுகளில் புகாமல் இருக்க கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு சாக்கு மூட்டைகளில் மண் நிரப்பி அணைபோடும் குடியிருப்பு வாசியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பரப்பற்று கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதியோ,மழை நீர் செல்ல வடிகால் வசதியோ இல்லை என கூறப்படுகிறது.
வருடா வருடம் மழைக்காலங்களில் இந்த குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கழிந்த பத்து வருடங்களாக இந்த கிராம மக்கள் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி கேட்டு மண்டைக்காடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையில் அந்த குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது.
தொடந்து பெய்த கனமழையால் ஆறு போல் பெருக்கெடுத்த மழை வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணி என்பவர் தனது உறவினர்கள் குழந்தைகளுடன் கொட்டும் மழையில் ஆபத்தை உணராமல் சாக்கு மூட்டைகளில் மண்ணை நிரப்பி ஆறு போல் ஓடும் மழை வெள்ளத்தை தடுத்து அணை போட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கொட்டும் மழையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு வாசி குடும்பத்தோடு மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த அணை போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.