கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை வெள்ளம். வீடுகளில் புகாமல் இருக்க கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு சாக்கு மூட்டைகளில் மண் நிரப்பி அணைபோடும் குடியிருப்பு வாசியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பரப்பற்று கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதியோ,மழை நீர் செல்ல வடிகால் வசதியோ இல்லை என கூறப்படுகிறது.
வருடா வருடம் மழைக்காலங்களில் இந்த குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கழிந்த பத்து வருடங்களாக இந்த கிராம மக்கள் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி கேட்டு மண்டைக்காடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையில் அந்த குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது.
தொடந்து பெய்த கனமழையால் ஆறு போல் பெருக்கெடுத்த மழை வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணி என்பவர் தனது உறவினர்கள் குழந்தைகளுடன் கொட்டும் மழையில் ஆபத்தை உணராமல் சாக்கு மூட்டைகளில் மண்ணை நிரப்பி ஆறு போல் ஓடும் மழை வெள்ளத்தை தடுத்து அணை போட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கொட்டும் மழையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு வாசி குடும்பத்தோடு மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த அணை போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.