தமிழகம்

அரை நிர்வாணத்துடன் கிடந்த உடல்.. அருகில் துப்பட்டா.. ஓசூரில் பரபரப்பு!

ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான பள்ளூர் பகுதியில் தனியார் மதுபானக் கடை உள்ளது. இந்த நிலையில், இந்த மதுபானக் கடை அருகே அரை நிர்வாணமாக சடலம் ஒன்று கிடந்து உள்ளது.

அது மட்டுமல்லாமல், அந்த சடலத்தின் அருகே துப்பட்டா ஒன்றும் இருந்து உள்ளது. இதனால், இது பாலியல் வன்கொடுமையாக இருக்குமோ என்ற எண்ணத்தில், இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைப் பார்த்தனர்.

அப்போது, அந்த உடலில் அரிவாளால் வெட்டப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்து உள்ளனர். அதேநேரம், அது ஒரு ஆணின் உடல் என்பதை உறுதிப்படுத்திய போலீசார், ஆம்புலன்ஸில் சடலத்தை அனுப்பி வைத்து, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவினர் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: பிரபல நடிகை வீட்டில் திருட்டு..போலீஸில் பரபரப்பு புகார்..!

இதன்படி, அவர் அழகுராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மேலும், அழகுராஜின் சடலம் அருகே துப்பட்டா, மதுபாட்டில், ஊறுகாய், இருசக்கர வாகனம், அந்த வாகனத்தில் நெய் டப்பாக்கள் ஆகியவை கிடந்து உள்ளது. இதனால், சடலமாக மீட்கப்பட்டவர் நெய் வியாபாரியாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டு உள்ள போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.