தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.
இப்படி ஓர் சம்பவம் நடந்த பிறகு, இருவரும் அவரவர் துறைகளில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது கிடைத்த தகவலின் படி இருவரும் கணவன்-மனைவியாக இருந்தபோது வசித்துவந்த வீட்டிற்கு அடிக்கடி வருகின்றனராம்.
மேலும், அந்த வீட்டில் மாட்டப்பட்டுள்ள பலகையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இரு பெயர்களும் இடம் பெற்றுள்ளதாம். அது தற்போது வரை நீக்கப்பட வில்லையாம். மேலும், இருவரும் தனித்தனியே அந்த வீட்டிற்கு வந்து சொல்கின்றனராம்.
இதனை கேட்ட சினிமா துறையினர் மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் மலருமா, மீண்டும் இணைந்தால் நல்லதுதான் என்று கூறிவருகின்றனர். விரைவில் நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.