தனுஷ் வாழ்க்கையில் திருப்புமுனை : மனைவியுடன் மீண்டும் மலரும் காதல்.? வெளியான புதிய தகவல்.!

Author: Rajesh
23 June 2022, 7:57 pm
Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.

இப்படி ஓர் சம்பவம் நடந்த பிறகு, இருவரும் அவரவர் துறைகளில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது கிடைத்த தகவலின் படி இருவரும் கணவன்-மனைவியாக இருந்தபோது வசித்துவந்த வீட்டிற்கு அடிக்கடி வருகின்றனராம்.

மேலும், அந்த வீட்டில் மாட்டப்பட்டுள்ள பலகையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இரு பெயர்களும் இடம் பெற்றுள்ளதாம். அது தற்போது வரை நீக்கப்பட வில்லையாம். மேலும், இருவரும் தனித்தனியே அந்த வீட்டிற்கு வந்து சொல்கின்றனராம்.

இதனை கேட்ட சினிமா துறையினர் மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் மலருமா, மீண்டும் இணைந்தால் நல்லதுதான் என்று கூறிவருகின்றனர். விரைவில் நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Views: - 579

2

0