தோனி தயாரிப்பில் நயன்தாரா.. புதுவிளக்கம் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருக்கும் மஹேந்திர சிங் தோனிக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி திரை பிரபலங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவு தோனிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவரது தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்து வந்த சஞ்சய் என்பவர் இணைந்துள்ளார் என்றும் இவரின் மூலமாக தோனி தமிழில் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் சில செய்திகள் வெளியானது.

மேலும் தோனி தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க போகிறார் என்கிற தகவல் இணையதள பக்கங்களில் தீயாக பரவி வந்தது. இந்நிலையில் இணையத்தில் பரவிய இத்தகைய செய்திகள் போலியானது என்று தோனியின் தயாரிப்பு நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூறுகையில், ‘தோனி எண்டெர்டெயின்மெண்ட் சஞ்சய் என்கிற பெயரில் யாருடனும் பணியாற்றவில்லை. எங்கள் நிறுவனம் தற்போது யாரையும் பணியமர்த்தவில்லை, அதனால் யாரும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்கள் தயாரிப்பு குழு வேறொரு வித்தியாசமான திட்டத்தை செய்து வருகிறது. விரைவில் அந்த அற்புதமான திட்டம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். அதுவரையில் காத்திருங்கள்’ என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தோனி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.